http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 27 March, 2012

திருமூலர்-திருமந்திரம்: 237 பதிகங்கள், 3000 பாடல்கள்:பத்தாம் திருமுறை




 

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் :: ஒன்று முதல் ஒன்பது தந்திரங்களில் முதல் தந்திரத்தின் 27 பதிகங்களின் விபரங்கள்.:
 237 பதிகங்கள், 3000 பாடல்கள்:பொழிப்புரை, குறிப்புரை:முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார். ==================================================

விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01....01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்: 39 ... 40

முதல் தந்திரம் - 27 பதிகங்கள்: ..............................(40+293=333)

பதிகம்: 1. சிவபரத்துவம்...................:பதிக பாடல்கள்: 56.......96
பதிகம்: 2. வேதச் சிறப்பு....................:பதிக பாடல்கள் 06......102
பதிகம்: 3. ஆகமச் சிறப்பு:...................பதிக பாடல்கள் 10.....112
பதிகம்: 4. உபதேசம்............................:பதிக பாடல்கள் 30......142
பதிகம்: 5. யாக்கை நிலையாமை....:பதிக பாடல்கள்: 25...167
பதிகம்: 6. செல்வம் நிலையாமை..:பதிக பாடல்கள்: 09....176
பதிகம்: 7. இளமை நிலையாமை...: பதிக பாடல்கள்: 10....186
பதிகம்: 8. உயிர் நிலையாமை........: பதிக பாடல்கள்: 10....196
பதிகம்: 9. கொல்லாமை....................: பதிக பாடல்கள்: 02....198
பதிகம்: 10. புலால் மறுத்தல்............: பதிக பாடல்கள்: 01....199
பதிகம்: 11. பிறன்மனை நயவாமை.: பதிக பாடல்கள்:03..202
பதிகம்: 12. மகளிர் இழிவு..................: பதிக பாடல்கள்: 06.....208
பதிகம்: 13. நல்குரவு.............................: பதிக பாடல்கள்: 05....213
பதிகம்: 14. அக்கினி காரியம்............: பதிக பாடல்கள்: 10....223
பதிகம்: 15. அந்தணர் ஒழுக்கம்........: பதிக பாடல்கள்: 14....237
பதிகம்: 16. அரசாட்சி முறை.............: பதிக பாடல்கள்: 10....247
பதிகம்: 17. வானச் சிறப்பு..................: பதிக பாடல்கள்: 02.....249
பதிகம்: 18. தானச் சிறப்பு....................: பதிக பாடல்கள்: 01....250
பதிகம்: 19. அறஞ்செய்வான் திறம்.: பதிக பாடல்கள்: 09...259
பதிகம்: 20. அறஞ்செயான் திறம்.....: பதிக பாடல்கள்: 10....269
பதிகம்: 21.அன்புடைமை....................: பதிக பாடல்கள்: 10....279
பதிகம்: 22.அன்பு செய்வாரை அறிவன் சிவன்:பாடல்கள்: 10-289
பதிகம்: 23. கல்வி........................: பதிக பாடல்கள்: 10...............299
பதிகம்: 24. கேள்வி கேட்டமைதல்...:பதிக பாடல்கள்:10....309
பதிகம்: 25. கல்லாமை..........................:பதிகபாடல்கள்: 10.....319
பதிகம்: 26. நடுவு நிலைமை................: பதிகபாடல்கள்: 03....322
பதிகம்: 27. கள்ளுண்ணாமை..............: பதிகபாடல்கள்: 11 ...333
*********************************************************
விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
விநாயகர் வணக்கம்

பாடல் எண் : 1

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


விளக்கவுரை ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

 

குறிப்புரை `இந்து` என்பது வடசொல்லாதலின் இன்பெறாது என்று, `இந்து விளம்பிறை` எனப்பாடம் ஓதுவாரும் உளர். `நந்தி` என்பது சிவபெருமானுக்கே பெயராதல் அறிக. திருமூலர் தமது நூலை ``ஒன்றவன்முன்`` எனத் தொடங்கினார் என்பது சேக்கிழார் திருமொழி யாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர் தாம் முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க. திருமுறைகளுள் ஒன்றிலும் முதற்கண் விநாயகர் காப்பு இல்லாமையும், சாத்திரங்களிலும் உந்தி, களிறு முதலிய சிலவற்றில் இல்லாமையும் நோக்கத் தக்கன. ``ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி`` என்பதே சேக்கிழார் திருமொழியாகலின், இந் நூலின் தொடக்கப்பாடல் ``ஒன்றவன்றானே`` என்னும் பாடலே என்பது இனிது விளங்கும்.

======================================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!